சில கேள்விகளும் – பதில்களும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்
ஒரு செயலைத் துவங்கினால்
அதை நல்லபடியாக முடிக்க வேண்டும். இதற்கு நல்ல திட்டமும் மனஉறுதியும் தெய்வ பலமும்
வேண்டும். திட்டமிடாமல், மன
உறுதியும் இல்லாமல் ஒரு செயலைத் துவங்கினால் அதை முடிக்க முடியாமல் திண்டாடுவோம்.
அப்போது, பலரும் பலவிதமாக ஆலோசனை
சொல்லி குழப்புவர். அப்போது, செயலைத்
தொடங்கியவருக்கு அங்கும் இங்கும் தாவும் குரங்கு போன்ற மனநிலை ஏற்பட்டு,
எடுத்த செயலை முடிக்காமலேயே விட்டு விடுவார்கள். ஒரு காரியத்தைச்
செய்யத் துவங்குவது என்பதை பிள்ளையார் பிடிப்பது என்றும்,
அது சரி வர நடக்காமல் போனால் அங்குமிங்கும் தாவும் குரங்காய்
முடிந்தது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
இதன் மற்றொரு அர்த்தம் எந்த ஒரு
வழிபாட்டையும் பிள்ளையாரின் துவங்கி ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்பதே.
நவக்கிரகங்களால் பிடிக்கப்பட முடியாத இருவர் ஆஞ்சநேயரும்,
பிள்ளையாரும் மட்டுமே. எனவே இந்த இரு தெய்வங்களை வழிபட்டாலேயே
நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.
சில கேள்விகளும் – பதில்களும் பக்கம் 01 செல்ல இங்கே அழுத்தவும்